தமிழக செய்திகள்

வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கீழக்கோட்டையூர் சங்கோதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேவதி (வயது 35). இவர் வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், ரேவதி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து ரேவதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு