தமிழக செய்திகள்

வேம்பக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வு

வேம்பக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தினத்தந்தி

வேம்பக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வுஅரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வேம்பக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தினேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பதவி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் உத்தரவின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யராஜ் வேம்பக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வேம்பக்குடி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி என்பவர் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் முத்துலட்சுமி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு