தமிழக செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காண இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி - நிர்வாகம் தகவல்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காண இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு விலங்குகள் இருப்பிடம், பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா பயோ சென்டர், உட்சென்று காணும் பறவைகள் இல்லம் போன்ற 4 பார்வையிடும் இடங்கள் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டன.

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரக்கூடிய இடமான வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. பார்வையாளர்கள் அதனை பார்வையிடலாம். இந்த தகவல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்