தமிழக செய்திகள்

விஜயின் மெர்சல் பட பேனர் வைத்தபோது சுவர் இடிந்து சிறுவன் பலி

விஜயின் மெர்சல் பட பேனர் வைத்தபோது சுவர் இடிந்து விஜய் ரசிகரான சிறுவன் பலியானான்

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேரு நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் யோகேஷ் (வயது 15 ). நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். யோகேஷ், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடிகர் விஜய்யின் மெர்சல் படம் வெற்றி பெற வாழ்த்தி பேனர் வைக்க முடிவு செய்தான்.

அந்த பேனரை வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே உள்ள தண்ணீர் தொட்டி சுவர் மீது வைப்பதற்காக நேற்று இரவு எடுத்து வந்தனர். சுவர் மீது ஏறியபோது திடீரென எதிர்பாராதவிதமாக தண்ணீர்தொட்டியின் சுவர் இடிந்து சிறுவன் யோகேஷ் மீது விழுந்தது. இதில் யோகேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து யோகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்