தமிழக செய்திகள்

வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது

வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது

தினத்தந்தி

கோவை

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி பன்சி மேரி லெப்சா (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் ராமநாதபுரம் மருதூரை சேர்ந்த கவிதா (45) என்பவர் கடந்த 7 மாதங்களாக வீட்டு வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் பன்சி மேரி லெப்சா வேலை நிமித்தமாக விழுப்புரம் சென்றார்.

பின்னர் கடந்த 16-ந் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.84 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் வீட்டு வேலைக்கு வந்த கவிதாவும் வேலைக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பன்சி மேரி லெப்சா அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நகை மற்றும் பணத்தை கவிதா திருடியது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு