தமிழக செய்திகள்

நெல்லிக்குப்பத்தில்மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

நெல்லிக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டா.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையிலான போலீசார், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி, விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் நெல்லிக்குப்பம் திருக்கண்டீஸ்வரத்தை சேர்ந்த சித்தார்த்தன் (வயது 23) என்பதும், இவர் நெல்லிக்குப்பம் தனியார் ஆலை முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை