தமிழக செய்திகள்

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய யூடியூபருக்கு ரூ.1,000 அபராதம்

ஊட்டியில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய யூடியூபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், ஊட்டியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டிய படி வாலிபர் ஒருவர் அதிவேகமாக சென்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் கோவையை சேர்ந்த யூ டியூபர் வாசன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கியதாக ரூ.1,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மீண்டும் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்