உலக செய்திகள்

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி, ஒருவர் காயம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

அலஸ்கா,

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள பனிப் படர்ந்த பகுதியான அன்க்ரோஜ் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். ஒருவர் காயம் அடைந்தார்.

ஹெலிகாப்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் நிக்கிளேசியர் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் அலஸ்கா மாகாண மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மீட்புகுழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ஒரு பயணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு