உலக செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை - 3 பேருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்டு

முதல் முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த 5 பேரை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர், கடந்த 27-ந்தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்தனர். மேலும், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 8 மீனவர்களின் வழக்கு இன்று இலங்கை மன்னார் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, முதல் முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 பேரும் இலங்கை மதிப்பில் தலா ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள 3 பேர் 2-வது முறையாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், இலங்கை மதிப்பில் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் இலங்கை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்