கோப்புப்படம் 
உலக செய்திகள்

சவுதி அரேபியா மீதான தாக்குதல்கள்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் - வெள்ளை மாளிகை

சவுதி அரேபியா மீதான தாக்குதல்களுக்கு, அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ஜெட்டா,

சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஏமனின் ஹவுதி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிலிருந்து சவுதி அரேபியா தன்னை தற்காத்துக்கொள்வதற்கு அந்த நாட்டுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்