உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி


* கொலம்பியாவில் கவுகா மாகாணத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

* ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தின் நேட்டோ படை நடத்திய வான்தாக்குதலில் 8 தலீபான் பயங்கரவாதிகளும், ஹக்கானி வலைக்குழுவின் மூத்த தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அதேபோல் உர்ஸ்கான் மாகாணத்தில் நடத்தப்பட்ட மற்றொரு வான்தாக்குதலில் 9 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

* கனடாவின் நியூபிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள கியூபெக் நகரில் வார இறுதிநாட்களில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அந்த நகரம் வெள்ளக்காடாகி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

* இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், விரைவில் ரஷியா சென்று அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்