Image Courtesy: AFP 
உலக செய்திகள்

உக்ரைனில் பேக்கரி தொழிற்சாலை மீது வெடிகுண்டு தாக்குதல் - 13 பேர் பலி

உக்ரைனில் பேக்கரி தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் பலியானதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கீவ்,

உக்ரைனின் தலைநகர் கீவ்வில் இருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகரிவில் உள்ள பேக்கரி தொழிற்சாலை மீது வெடிகுண்டுகள் வீசி ரஷியா நடத்திய தாக்குதலில் சிக்கி குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக நாட்டின் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரஷியா நடத்தில் குண்டுவீச்சு தாக்குதலின் போது சுமார் 30 பேர் பேக்கரி பகுதியில் இருந்ததாக டெலிகிராமில் மீட்புப் பணியாளர்கள் செய்தி வெளியிட்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படாமல் செய்தி நீக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை மீட்டுள்ளதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தன்று பேக்கரி இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்