உலக செய்திகள்

மெக்காவில் வெப்ப அலைக்கு இதுவரை 1,301 பேர் பலி

மெக்காவில் வெப்ப அலைக்கு இந்தியர்கள் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினத்தந்தி

மெக்கா,

சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனர். மெக்காவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை வீசியது. இந்த வெப்ப அலைக்கு மொத்தம் 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா சுகாதாரத்துறை மந்திரி பஹத் பின் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 660 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்தியர்கள் 98 பேரும், இந்தோனேசியாவை சேர்ந்த 165 பேரும் இறந்து உள்ளனர். மேலும் ஜோர்டான், துனிசியா,மொரோக்கோ, அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகளும் வெப்ப அலைக்கு இறந்து விட்டனர். இதில் முறையான பாதுகாப்பு இல்லாமல் நீண்ட தூரம் நடந்து வந்தவர்களும், வயதானவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம் பேர் ஆவார்கள். மேலும் ஹஜ் புனித யாத்திரைக்கு புதிவு செய்யாமல் வந்த பலரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு