உலக செய்திகள்

பொலிவியா நாட்டு சிறையில் போலீசாருடனான மோதலில் 6 கைதிகள் பலி

பொலிவியா நாட்டில் சிறையில் போலீசாருடனான மோதலில் 6 கைதிகள் பலியாகினர்.

தினத்தந்தி

லாபஸ்,

பொலிவியாவில் சான்டா குரூஸ் நகரில் பல்மசோலா சிறைச்சாலை உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், துப்பாக்கிகள், கொக்கைன் மற்றும் மரிஜுவானா போன்ற போதை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சிறைச்சாலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 5 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். அவர்கள் போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 6 போலீசார் சுடப்பட்டு காயமடைந்தனர். சிறை கைதிகளில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2013ம் ஆண்டு கைதிகளுக்கு இடையேயான மோதலில் 34 பேர் சிறையில் கொல்லப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்