Image Courtacy: AFP 
உலக செய்திகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஒட்டாவா,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்ததால் தற்போது நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி இருந்ததால், தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன், எனவே, நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். நமது சுகாதார அமைப்பையும், மற்றவர்களையும் மற்றும் நம்மையும் பாதுகாப்போம்" என்று அதில் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம், கலிபோர்னியாவில் நடந்த அமெரிக்காவின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். குடியேற்றம் உள்பட அந்த நாடுகளைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் கூடியது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்