டெஹ்ரான்,
ஈரானின் வடமேற்கு பகுதியில் அஜர்பைஜன் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அர்டாபில் மாகாணத்தில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மைக்கோயன் மிக் 29 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்தார்.
புறப்பட்டு சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. இதில் அந்த விமானம் அர்டாபிலில் உள்ள சபாலான் மலைப்பிரதேசத்துக்கு அருகே தரையில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. ஆனால் விமானத்தில் இருந்த விமானியின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
மீட்பு குழுவினர் 3 ஹெலிகாப்டர்களில் சென்று விபத்துக்குள்ளான விமானத்தையும், விமானியையும் தேடி வருகின்றனர்.