உலக செய்திகள்

மலேசியா: கடலில் மூழ்கிய கப்பல் - 100 பேர் மாயமானதாக தகவல்

மீட்பு பணியில் இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

மியான்மரின் புதிடாங் நகரில் இருந்து கடல் வழியாக ஒரு படகு புறப்பட்டது. தாய்லாந்து-மலேசியா எல்லை அருகே உள்ள லங்காவி பகுதியில் சென்றபோது பாரம் தாங்காமல் அந்த படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து மலேசிய கடலோர போலீசார் அங்கு விரைந்ததும் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது.

இந்த மீட்பு பணியில் இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசிய கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது. இறந்த ஒருவரின் உடல் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி