கோப்புப்படம் 
உலக செய்திகள்

நில மோசடி வழக்கு: பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் கைது

நில மோசடி வழக்கில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அக்தர் ஹாஷ்மி. இவர் எவாகியு சொத்து அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் அங்கு குஜராத்தில் ரூ.13.5 கோடி மதிப்பிலான 13 கனல் பிரதம நகர்ப்புற நிலத்தை அபகரித்து மோசடி செய்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்பேரில் அவரை பாகிஸ்தான் மத்திய புலனாய்வு படையினர் எப்.ஐ.ஏ.யினர் நேற்று கைது செய்தனர். இவர் இது போன்று மத்திய அரசின் 12 நிலங்களை அபகரித்தது, பொது நிதியை சுருட்டியது தொடர்பான வழக்குகளில தொடர்பு உடையவர் என தகவல்கள் கூறுகின்றன.

தேசிய பொறுப்புடைமை முகமையால் (ஊழல் தடுப்பு அமைப்பு) 16 வழக்குகளில் விசாரிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்