மும்பை,
மும்பை- கராச்சி இடையே வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும் சர்வதேச விமானத்தை மே 11 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. மே 11 ஆம் தேதிக்கு பிறகு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த முன்பதிவையும் மேற்கொள்ளவில்லை. விமான சேவை எதனால் நிறுத்தப்படுகிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எனினும், அண்மைக்காலமாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் அதிகரித்துள்ள பதட்டத்தினால் மட்டும் அல்லாது வணிக ரீதியிலும் இத்தகைய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் மும்பை- கராச்சி செல்லும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.