உலக செய்திகள்

வங்கதேச பிரதமரை அழைத்துவர சென்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார்

வங்காளதேச பிரதமரை அழைத்துவர சென்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா மூன்று நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பின்லாந்தில் இருந்து நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார். அவரை அழைத்து வர வங்காளதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் சென்றது.

விமானம் கத்தார் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே வங்கதேச அரசு அவருடைய பாஸ்போர்ட்டை கத்தாருக்கு அனுப்பியது. ஷேக் ஹசினாவை அழைத்துவர மற்றொரு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அந்த விமானம் பின்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இவ்விவகாரத்தில் விசாரணையை மேற்கொண்டு விமானியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை