உலக செய்திகள்

இந்தியா பாகிஸ்தானிடையே பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அழைப்பு

காஷ்மீரில் நடைபெறும் எல்லை மீறிய தாக்குதல் குறித்து இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா சபையின் பொது செயலாளர் ஸ்டீபன் டூஜரிக் அழைப்பு விடுத்துள்ளதாக ஐ.நா. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #UNencourages

தினத்தந்தி

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அண்டோனியோ கெடரெஸ், காஷ்மீரில் நடைபெறும் எல்லை மீறிய தாக்குதல்களை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தீர்க்க ஐ.நா. ஊக்குவிக்க வேண்டும் எனவும் கெடரெஸ் கூறியதாக ஐ.நா. செய்தி தொடர்பாளர் கூறினார்.

இது குறித்து ஐ.நா சபையின் பொது செயலாளர் ஸ்டீபன் டூஜரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கிடையேயான எல்லை மீறிய தாக்குதல்களை நாங்கள் மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறோம். இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை சமாதான முறையில் தீர்க்க நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். பேச்சுவார்த்தை குறித்து இரு நாட்டு பிரதமர்களிடம் அறிக்கை இன்னும் ஏதும் வெளியிடவில்லை எனக் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்