ஆன்மிகம்

146 அடி உயர முருகன் சிலை; முத்துமலை கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

முத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தினத்தந்தி

சேலம்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கோவில்களுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோவிலில் உலகிலேயே மிக உயரமான, 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முத்துமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்