ஆன்மிகம்

குழந்தை செல்வம் தரும் அம்பிகை வழிபாடு

ஆடிப்பூர நாளில் முளைகட்டிய தானியத்தை அம்மனுக்கு படைத்து உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தினத்தந்தி

கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம், ஆடி மாதம். இந்த மாதத்தில் சுக்ரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாளை 'ஆடிப்பூரம்' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரம் 28-7-2025 (திங்கட்கிழமை) அன்று வருகிறது. அன்றைய தினம் திருக்கோவில்கள்தோறும் உற்சவங்கள் நடைபெறும். இந்த ஆடிப்பூர நாளில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால், புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர்களுக்கு புத்திரப்பேறு ஏற்படும் என்பது ஐதீகம்.

சில ஆலயங்களில் முளைக்கட்டிய தானியத்தை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்வர். ஆடிப்பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாகவே பச்சைப் பயிரைத் தண்ணீரில் நனைய வைப்பர். அது ஆடிப் பூரத்தன்று நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியமாகப் படைத்துவிட்டு, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். அதைச் சாப்பிடும் பெண்களுக்கு, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதேபோல் திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்