ஆன்மிகம்

ஆவணி அவிட்டம்: திருத்தணி முருகன் கோவில் இன்று 3 மணி நேரம் மூடப்படும்

திருத்தணி முருகன் கோவில் இன்று 3 மணி நேரம் மூடப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காலை 6 மணி முதல் இரவு 8 45 மணி வரை நடை திறந்திருக்கும்.

இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) ஆவணி அவிட்டம் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் நடை மூடப்பட்டு இருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கோவிலில் பணிபுரியும் அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குருக்கள் என 75-க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 3 மணிக்கு மேல் கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்