ஆன்மிகம்

அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன.

தினத்தந்தி

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு