ஆன்மிகம்

வைத்தீஸ்வரன்கோவில் மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

அம்மன் வீதி உலா நடைபெற்ற போது பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு மாவினால் கோலமிட்டு, மாவிளக்கு, அர்ச்சனைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

தினத்தந்தி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதசுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கீழத்தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலின் சித்திரை திருவிழா காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வைத்தீஸ்வரன் கோவில் வர்த்தக சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதனை ஒட்டி அம்மனுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், மேள தாளம் முழங்கிட அம்மன் வீதி உலா காட்சி நடந்தது.

வீதி உலாவின்போது பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு மாவினால் கோலமிட்டு, மாவிளக்கு, அர்ச்சனைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

இதில் வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன், கௌரவத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மதியழகன், பொருளாளர் ராமதாஸ், இணைப் பொருளாளர் சத்தியசீலன், நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் முருகேசன் நாடார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு