ஆன்மிகம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா துவக்கம்

27ம் தேதி சூரசம்ஹாரமும் அதனைத் தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா நிகழ்ச்சிகள் 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு வருட கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இதையொட்டி காலை தனுர் லக்னத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி தேவசேனா சமேத சண்முக சுவாமி, சந்திரசேகரர், வீரபாகு, வீரகேசரி சுவாமிகள் மலைக்கோவிலில் இருந்து படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 26-ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 27ம் தேதி 7ம் திருநாளாக மகா கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுவாமிநாதன், கோயில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உபயதாரர்கள் பங்கேற்புடன் செய்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்