ஆன்மிகம்

குலசை முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழா: கும்பம் திருவீதி உலா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று (ஆகஸ்ட் 4) இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் துவங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடந்தது.

விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10 மணியளவில் கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாளை காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்