ஆன்மிகம்

முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில், நாளை முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தினத்தந்தி

வைகாசி விசாகம்

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தந்தப்பல்லக்கில் புறப்பாடும், இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி இன்னிசை, சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது.

தேரோட்டம்

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

15-ந்தேதி கொடி இறக்குதலுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு