ஆன்மிகம்

தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்.. திருப்பதியில் புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வெங்கமாம்பாவின் சந்ததியினர் கலந்துகொண்டனர்.

தினத்தந்தி

திருப்பதி ஏழுமலையானின் பெருமையை போற்றி பல பாடல்களை இயற்றிய பெண் துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பாவின் 208-வது ஆண்டு நினைவு நாள், அவரின் அவதார தலமான தரிகொண்டாவிலும், திருப்பதியிலும் நேற்று அனுசரிக்கப்பட்டது.

திருப்பதி திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வெங்கமாம்பாவின் சந்ததியினர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலையரங்கில் வெங்கமாம்பா கீர்த்தனைகள், ஸ்ரீனிவாச கல்யாணம் குறித்த ஹரிகதை நிகழ்ச்சி மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்