மும்பை

கன்சோலி ஆஸ்பத்திரி அருகே கேட்பாரற்று கிடந்த பையில் பச்சிளம்குழந்தை மீட்பு

கன்சோலி ஆஸ்பத்திரி அருகே கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த குழந்தையை போலீசார் மீட்டனர்

தினத்தந்தி

நவிமும்பை, 

நவிமும்பை கன்சோலி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கேட்பாரற்று கிடந்த பையில் குழந்தை ஒன்று கிடப்பதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிறந்து 4 நாட்களே ஆன அந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் நெரூலில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதில் அடையாளம் தெரியாத ஆசாமி ஆஸ்பத்திரி அருகே குழந்தை இருந்த பையை வைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை விட்டு சென்ற ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்