கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் முன்னேற்றம்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் புதிய தரவரிசைப்பட்டியலில் தீப்தி ஷர்மா முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி:

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத்மூனி முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீராங்கனைகள் மந்தனா 4-வது இடத்திலும், ஷபாலி வர்மா 6-வது இடத்திலும் தொடருகின்றனர்.

இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 3 இடங்கள் அதிகரித்து 34-வது இடத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் 4 இடம் உயர்ந்து 75-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டென் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 5 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு