பெங்களூரு

காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம்

காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லை அடுத்த கக்கிபிக்கி காலனியை சேர்ந்தவர் சிக்கமுத்தையா(வயது 34). இவர் பன்னரகட்டா வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிக்கமுத்தையா வேலை முடிந்து கத்தஹள்ளி அருகே தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டுயானை, சிக்கமுத்தையாவை தாக்கி தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. பின்னர் காலால் அவரை மிதித்தது. பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சிக்கமுத்தையா, தற்போது ஜிகினி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் கத்தஹள்ளி பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அவர்கள் காட்டுயானை நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்