வாலிபாலை மையமாகக் கொண்ட 'அட்டாக்கர்'... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

இந்த நிகழ்வை இயக்குநர் பா. இரஞ்சித் தொடங்கி வைத்தார்.
வாலிபாலை மையமாகக் கொண்ட 'அட்டாக்கர்'... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
Published on

சென்னை:

இயக்குநர் பா. இரஞ்சித்தின் முன்னாள் இணை இயக்குநரான தாமோ நாகபூஷ்ணம், 'அட்டாக்கர்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார்.

வாலிபாலை மையமாகக் கொண்ட முதல் தமிழ் படம்

சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் 'அட்டாக்கர்', வாலிபால் விளையாட்டை பிரதான கதைக்களமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் வாலிபால் விளையாட்டை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய உணர்வுகள், சமூகப் பின்னணி மற்றும் கலாச்சார அடையாளங்களையும் ஆழமாகப் பதிவு செய்யும் வகையில் உருவாகி வருகிறது.

முன்னணி வாலிபால் வீரர்கள் நடிப்பு

படத்திற்கு நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகர்களான பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் ஆகியோர், தங்களது கதாபாத்திரங்களுக்காக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் ஆறு மாதங்களுக்கும் மேலாக தீவிர பயிற்சி பெற்றுள்ளனர்.

நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா சுந்தர், இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

இந்த நிலையில், 'அட்டாக்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வை இயக்குநர் பா. இரஞ்சித் தொடங்கி வைத்தார். விளையாட்டு, சமூக உணர்வு மற்றும் கலாச்சார பின்னணியை இணைத்து உருவாகும் 'அட்டாக்கர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com