இயக்குனர் பாக்யராஜ் மறைவு - கவர்னர் ஆர்.வி. அர்லேகர் இரங்கல்

தமிழ் சினிமாவிற்கு பாக்யராஜ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது.
இயக்குனர் பாக்யராஜ் மறைவு - கவர்னர் ஆர்.வி. அர்லேகர் இரங்கல்
Published on

சென்னை,

தமிழக பொறுப்பு கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாக்யராஜ் மறைவு

" மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

கவர்னர் இரங்கல்

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com