வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

தமிழக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் போலீஸ் துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைப்பது என்பது குறித்த கட்டுரை போட்டியும், போலீசார் பொதுமக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.

கட்டுரைபோட்டியில் மகாராஜபுரம் ரெங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி சஜித் முதல் பரிசும், விருதுநகர் டி.பி.என்.எம். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி ஹேம தர்ஷினி 2-வது பரிசும், திருத்தங்கல் குளோரி மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி மனிஷா 3-வது பரிசும் வென்றனர்.

ஓவியப்போட்டியில் திருத்தங்கல் கலைமகள் உயர்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி சுஜிதா முதல் பரிசும், பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் சந்திரநாதா கணேஷ் 2-வது பரிசும் வென்றனர்.

கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி நேகா 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com