பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

வரகூர் கிராமத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வரகூர் கிராமத்தில் இரண்டாம் சனிக்கிழமையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத கருணாகடாஷ பெருமாளுக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com