ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது டெல்லி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி நிர்ணையித்துள்ளது. #IPL #DD #RCB
ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது டெல்லி
Published on

டெல்லி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரித்வி ஷா(2 ரன்கள்) தாக்கு பிடிக்கவில்லை. ஜோசன் ராய் 12 ரன்களில் வெளியேறினார். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 ( 35 பந்துகள்), ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அபாயகரமான பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசிய ரிஷாப் பாண்ட் 61 ரன்கள் ( 34 பந்துகள்) டி வில்லியர்சின் பிரம்மிக்கத்தக்க கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். கடைசி கட்ட ஓவர்களில் அபிசேக் சர்மா ( 46 ரன்கள், 19 பந்துகள் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) அதிரடி காட்ட டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.

இதன்மூலம் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சகால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com