இத்தாலி ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy: twitter/@InteBNLdItalia


சபலென்கா 3-வது சுற்றில் சோபியா கெனின் உடன் மோத உள்ளார்.
ரோம்,
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலாரஸ்), அனஸ்தேசியா பொட்டாபோவா (ரஷியா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-2 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் 3-வது சுற்றில் சோபியா கெனின் உடன் மோத உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire