புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

கதிர்காமம் சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் சண்முகம் (வயது44). இவர் வீட்டிலேயே சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிளை 2 பேர் தள்ளிக் கொண்டு சென்றனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் 2 பேரையும் பிடித்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அய்யங் குட்டிப்பாளையம் ராஜேஷ் (27), வேல்ராம்பேட் தமிழன்பன் (37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு