சினிமா செய்திகள்

’அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது’ - தமன்னா

தனக்கு மிகவும் வெறுப்பு தரும் விஷயங்களைப் பற்றி தமன்னா சமீபத்தில் மனம் திறந்து பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சில வருடங்களாக தனி பாடலுக்கு நடனமாடி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை அவருக்காக உருவாக்கியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த தமன்னா பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்தனர்.

இதற்கிடையில், தனக்கு மிகவும் வெறுப்பு தரும் விஷயங்களைப் பற்றி தமன்னா சமீபத்தில் மனம் திறந்து பேசினார். தவறுகளை மன்னிக்க முடியும், ஆனால் தன் முகத்திற்கு நேராக பொய் சொன்னால் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது என்று அவர் கூறினார்.

"யாராவது என் முகத்துக்கு நேராகப் பொய் கூறி, நான் அதை நம்பும் அளவுக்கு முட்டாள் என நினைப்பது எனக்கு மிகவும் கோபத்தை கொடுக்கிறது" என்று தமன்னா கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து