மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 58 பெட்டிகளில் 6 லட்சத்து 93 ஆயிரத்து 970 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் மத்திய தொகுப்புக்காக புனேவில் இருந்து சென்னைக்கு 27 பெட்டிகளில் வந்த 3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு