மாவட்ட செய்திகள்

கோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

கோவிலாங்குளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே உச்சிநத்தம் பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசுவரன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தாங்கள் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அதை எடுத்து பார்த்த போது அதில் 20 கிலோ 700 கிராம் கஞ்சா, ஒரு வாள் ஆகியவை இருந்தது. தொடர்ந்து போலீசார் மர்ம நபர்களை விரட்டி சென்ற போது, அதில் ஒருவனை மடக்கி பிடித்தனர்.

மற்றொருவர் உச்சிநத்தம் பாலத்தில் இருந்து கீழே குதித்தார். ஆனால் போலீசார் அவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது 3-வது நபர் தப்பியோடி தலைமறைவானார். பிடிபட்டவர்களிடம் விசாரித்ததில் எம்.கரிசல்குளம் தனியான்கோட்டம் பகுதியை சேர்ந்த கந்தன் மகன் பழனிநாதன்(வயது 28), கருப்பையா மகன் முத்துக்குமார்(23) என்பது தெரிந்தது.

பழனிநாதன் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. இவர் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி கோவிலாங்குளம் அருகில் கொம்பூதி விலக்கு ரோட்டில் வேலாயுதம் என்பவரது மகன் நேதாஜி(21) என்பவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் 2 பேருக்கும் தொடர்புஇருப்பதுதெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து