மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 24 பேர் கைது

பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பொள்ளாச்சி,

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000, கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரூ.1000 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், ரூ.1500 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் புதிய சட்ட விதிகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் நேற்று 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை