திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவர் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் முதியவர் ஒருவரை தாக்கி கொண்டிருந்தனர்.
இதை பார்த்த யுவராஜ், அவரை ஏன் தாக்குகிறீர்கள்? என்று கேட்டதற்கு 3 பேரும் சேர்ந்து யுவராஜை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளை எரித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசில் அளித்த புகாரின் பேரில், காட்டாவூர் பெரியகாலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார் (வயது 22), சூர்யா (23), ராஜேஷ் (24) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.