மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனை முடிவில் உறுதியானது

பி.துறிஞ்சிப்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் உறுதியானது.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 26-ந்தேதி வந்து சென்ற சேலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு உள்ளானது அண்மையில் உறுதியானது. இதையடுத்து அவர் வந்து சென்ற வீட்டில் வசிக்கும் அவருடைய உறவினர்கள் 5 பேரை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தினார்கள். அவர்களுடைய ரத்த மாதிரிகள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவில் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அந்த 5 பேரும் தொடர்ந்து வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து