மாவட்ட செய்திகள்

திருத்தணி நகரில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 25 பேர் வாக்களிப்பு

திருத்தணி நகரில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 25 பேர் வாக்களிப்பு தேர்தல் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரித்தனர்.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி நகரத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிக்க வசதியாக 29 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.டி.ஓ. சத்யா உத்தரவுப்படி அவர்களிடமிருந்து தபால் வாக்குகள் பெற வசதியாக வருவாய்த்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் திருத்தணி நகரத்தில் வசிக்கும் முன்பதிவு செய்து இருந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேற்று வருவாய்த்துறையினர் நேரடியாகச் சென்று வாக்குகளை பதிவு செய்து பெற்று வந்தனர்.

திருத்தணி நகரில் மட்டும் மொத்தம் 29 பேரில், 25 பேர் தங்கள் வீடுகளிலிருந்து தங்களின் விருப்பமான கட்சிக்கு வாக்குகளை பதிவு செய்தனர். மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். மற்ற 3 பேரும் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். விடுபட்ட 3 பேருக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர்களது வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு பெற முயல்வோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை