மாவட்ட செய்திகள்

டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக பள்ளிக்கூட குடிநீர் தேக்க தொட்டியில் ஏறிய வாலிபர் இறங்க முடியாமல் தவிப்பு

டெங்கு ஒழிப்பு பணிக்காக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூட குடிநீர் தேக்க தொட்டியில் ஏறிய வாலிபர் கீழே இறங்க முடியாமல் தவித்தார். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் 50 பேர் கொண்ட சிறப்பு வாலிபர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 212 பள்ளிக்கூடங்கள், 8 கல்லூரிகள், 10 தங்கும் விடுதிகளில் இந்த குழுவினர் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர். இவர்கள், நேற்று பாளையங்கோட்டையில் ஒரு பள்ளிக்கூடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள 50 அடி உயரம் கொண்ட குடிநீர் தேக்க தொட்டியில் இக்குழுவை சேர்ந்த பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த ஜவகர் மகன் ராகவ் (வயது 24) என்பவர் ஏறினார். அந்த தொட்டிக்குள் இறங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கீழே இறங்க வர முயற்சி செய்தார். தொட்டி 50 அடி உயரத்தில் இருந்ததால் இறங்க முடியாமல் தவித்தார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி அவரை கீழே இறக்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை