மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு மீண்டும் சம்மன் - இன்று ஆஜராக உத்தரவு

இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி, நடிகை பாரதி சிங் உள்ளிட்ட பலரை இதுவரை கைது செய்து உள்ளனர்.

இதில் கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து எலெக்ட்ரானிக் சாதனங்கள், தடை செய்யப்பட்ட சில மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கடந்த மாதம் 13-ந் தேதி நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகரின் காதலி கேப்ரிலா டெம்ரிடியேசிடமும் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரை 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்