மாவட்ட செய்திகள்

இலவச மடிக்கணினி கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாணவிகள் முற்றுகை

இலவச மடிக்கணினி கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாணவிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவிகள் ஏராளமானோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவிகள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:- தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2018-19-ம் ஆண்டில் படித்த மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே முதலில் எங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT